நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தல்..!!

டெல்லி: நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்டு ரூபாய் நோட்டுகளை வாகனத்தின் மீது கொட்டி மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டம் வலுக்கிறது.

 

Related posts

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்