டெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் குளறுபடி என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.