டெல்லி : மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-களின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து, சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.இதையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. நீட் முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.