சென்னை: நீட் தேர்வுக்கு முடிவுகட்டும் நாள்தான் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கொளத்தூர் தொகுதிக்கு வரும்போதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 13 லட்சம் மாணவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது எனவும் கூறினார்.