சென்னை: நீலாங்கரையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் அமர்ந்தார். மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜயிடம் வழங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த விஜய், அவரை கட்டியணைத்து பாராட்டினார்.