புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் நக்சலைட் கமாண்டரை என்ஐஏ அதிடியாக கைது செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்தவர் தினேஷ் கோப் என்ற குல்தீப் யாதவ். மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பில் இருந்து பிரிந்த இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் தளபதியான தினேஷ் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜார்க்கண்டில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது. இந்நிலையில், தினேஷ் கோப்பை டெல்லியில் என்ஐஏ நேற்று கைது செய்தது.