நவீன் பட்நாயக் தோல்வி ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது பாஜ

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜ முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால முதல்வர் பதவி முடிவுக்கு வந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 147 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், ஆளும் பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. ஆட்சி அமைக்க 74 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜ 78 தொகுதிகளை கைப்பற்றி முதல் முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், நவீன் பட்நாயக் 6வது முறையாக முதல்வராகும் கனவு தகர்ந்தது. அவர் 2000 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை சட்டப்பேரவை தேர்தலில் வென்று முதல்வராக இருந்துள்ளார்.

24 ஆண்டுக்கு மேலாக முதல்வர் பதவியை வகித்துள்ளார். இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பட்நாயக் தனது பாரம்பரியமான ஹின்ஜிலியில் வென்ற நிலையில், கன்தாபன்சி தொகுதியில் பாஜ வேட்பாளர் லட்சுமண் பாகிடம் தோல்வியை சந்தித்தார். இதே போல பட்நாயக்கின் அமைச்சரவையில் இடம் பெற்ற 8 அமைச்சர்களும் தோல்வி அடைந்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை