இதுகுறித்து மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜ அரசு விசாரணையை தொடங்கி உள்ளது. ஒடிசா சட்டம், கலால் மற்றும் பணித்துறை அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் கூறுகையில், “வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர்கள் வசதியாக தரையிறங்க 50 ஹெலிபேட்கள் கட்டப்பட்டுள்ளன. ஹெலிபேட்கள் அமைக்க யார் அனுமதி அளித்தார்கள். அதற்கான செலவுகள் எவ்வாறு செய்யப்பட்டன என்பது பற்றி முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.