இயற்கை உரம் வாங்க நிர்பந்தம்: அரசுகள் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: நபார்டு வங்கியில் வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகளை இயற்கை உரம் வாங்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என்ற வழக்கு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூரைச் சேர்ந்த விவசாயி ஜோதிபாசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ஒன்றிய அரசின் கடனை பெற விவசாயிகள், டான்ஃபெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு