Wednesday, July 3, 2024
Home » நாடு முழுவதும் 374 மாவட்டங்களை கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு: ஒன்றிய அரசு

நாடு முழுவதும் 374 மாவட்டங்களை கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிப்பு: ஒன்றிய அரசு

by MuthuKumar

டெல்லி: 2008ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்ட தரவுகளின்படி, உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தின்(GER) அடிப்படையில், நாடு முழுவதும் 374 மாவட்டங்கள், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 41 மாவட்டங்களும், மத்தியபிரதேசத்தில் 39 மாவட்டகளும் பட்டியளிடபட்டுள்ளது. இந்த பட்டியளில் தமிழ்நாட்டை சேர்ந்த 27 மாவட்டங்கள் பட்டியளிடபட்டுள்ளது.

நேற்று (31.07.2023) பதிலளித்த நிஷிகாந்த் துபே மற்றும் ஸ்ரீ என். ரெட்டப்பா, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வியெழுப்பபட்டிருந்தது. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு, கடந்த காலத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2008 இல் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தின் (GER) அடிப்படையில் 374 கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை கண்டறிந்தது.

இடைப்பட்ட காலத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) என்ற திட்டமானது, சேவையற்ற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உயர்கல்வியில் அணுகல், சமத்துவம் மற்றும் சிறப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் இன்றுவரை, 2972 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக மத்திய பங்கு ரூ.7085.40 கோடி ஜார்கண்ட் உட்பட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி உச்சதர் சிக்ஷா அபியான் (PM-USHA) வடிவில் RUSA இன் அடுத்த கட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 2023-24 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுக்கு ரூ.12926.10 கோடி, இந்த திட்டத்தின் கீழ் குறைந்த , பாலின சமத்துவம், SC/ST களின் மக்கள் தொகை விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் ஆர்வமுள்ள மாவட்டங்கள், LWE பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் கவனம் செலுத்தும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi