தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு அணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த தேசிய மகளிர் கால்பந்து தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணியில் உள்ள வீராங்கனைகளுக்கான வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்று பயிற்சியாளர் கோகிலா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்