சென்னை: தேசிய மருத்துவ தகுதித்தேர்வை கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நீட் தேர்வால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. நெக்ஸ்ட் தேர்வால் கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.