தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டி தமிழக அணியில் ஆர்எம்கே பள்ளி மாணவர்கள் தேர்வு

கும்மிடிப்பூண்டி: தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட ஆர்எம்கே பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான வாட்டர் போலோ போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கவரப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய 13 வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் கவரப்பேட்டை ஆர்.எம்.கே. ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சாய் கௌசிக் மற்றும் சாய் மகேந்திரா தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கும் தேசிய அளவிலான வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி பங்கேற்க உள்ளது. சாதனை படைத்த மாணவர்களை பள்ளிக்கூட தாளாளர் யலமஞ்சி பிரதீப், பள்ளி முதல்வர் சப்னா சங்கலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி தமிழக அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை