டெல்லி: தேசியவாத காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபுல் பட்டேல், சுனில் தத்கரேவை சரத்பவார் நீக்கியுள்ளார். பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு) ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து பிரபுல் பட்டேல், சுனில் தத்கரே நீக்கம் செய்யப்பட்டது. அண்மையில் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.