சென்னை: தேசிய மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது எனவும் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தலைமைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹென்றி வலியுறுத்தியுள்ளார்.