புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான விஜய பாரதி சயானி, அந்த அமைப்பின் செயல் தலைவரானார். அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்றதால் பொறுப்பு தலைவராக சயானி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.