டெல்லி: தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். harghartiranga.com என்ற இணையத்தளத்தில் புகைப்படத்தை பகிர நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை விடுத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார். தனது X வலைதள பக்கத்தில் தேசியக் கொடியை முகப்புப்படமாக பிரதமர் மோடி மாற்றினார்.