இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்… அப்பா, உங்கள் அறிவுரைகள் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. உங்களது நினைவுகளுடன் இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ராஜிவின் மகளுமான பிரியங்கா , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.