நிலக்கோட்டை பேரூர் முன்னாள் பொறுப்பாளர் தங்கராஜ், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கணேசன் அடங்கிய குழுவினர், ‘‘நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழியின் கணவர் சேகர், ஒன்றிய செயலாளர் யாகப்பன் ஆகியோர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் எவ்வித ஆலோசனைகளும் செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர், யாரையும் மதிப்பதில்லை. எங்களை செயல்படவிடாமல் தடுத்து கட்சியை முடக்குகின்றனர்’’ என சரமாரியாக குற்றச்சாட்டுகள் வைத்தனர். தொடர்ந்து இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்படவே சமாதானம் செய்ய முடியாமல் திணறிய நத்தம் விஸ்வநாதன் நைசாக நழுவி காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். எனினும் டீக்கடைக்குள் துவங்கிய கட்சியின் உட்கட்சி பூசல், வாக்குவாதம் சாலை வரைக்கும் நீடித்தது. இச்சம்பவம் அதிமுகவினர், அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.