இந்த விவகாரத்தில் ஜாபர் சாதிக் என்பவரை கடந்த 9ம் தேதி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீரை விசாரிக்க என்.சி.பி அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விவகாரத்தில் டெல்லி ஆர்.கே.புரத்தில் இருக்கும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீர் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் அதிகாரிகள் முன்வைத்ததாக தெரியவருகிறது.