ஒன்றிய அரசு முகமையான என்சிபி கஞ்சா, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை பற்றி தகவல்களை பரிமாறி வருகிறது. சென்னை முதல் குமரி வரை கடற்கரை பகுதிகளில் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க 42 கடல்சார் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள், சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிக சக்தி வாய்ந்த 24 படகுகள் தரப்பட்டுள்ளன. தமிழ்நாடு போலீஸ் மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் கஞ்சா பயிரிடப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.