நாங்குநேரி அருகே பைக் விபத்தில் விவசாயி படுகாயம்

 

களக்காடு,நவ.6: நாங்குநேரி அருகே பட்டபிள்ளைபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் உடையார் மகன் பெருமாள் (51). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பட்டபிள்ளைபுதூர் சாஸ்தா கோயில் அருகே சென்ற போது, பின்னால் வந்த பைக் மோதியது. இதில் பெருமாள் படுகாயம் அடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த உன்னங்குளத்தை சேர்ந்த சங்கரகுமார் மகன் சின்ராஜ் (21) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்