சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. பாப்பம்மாளுக்கு பெரியார் விருது, அறந்தாங்கி ‘மிசா’ ராமநாதனுக்கு அண்ணா விருது வழங்கப்பட உள்ளது. எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது, கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட உள்ளது. வி.பி.இராஜனுக்கு பேராசிரியர் விருது, தஞ்சை எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட உள்ளது.