சென்னை: பொதுத்துறை செயலாளராக நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மனித வளத்துறை செயலாளர் நந்தக்குமார், பொதுத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், மனித வளத்துறை செயலாளர் பதவியை கூடுதலாக கவனிப்பார்.கூட்டுறவு, உணவு பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ஜெகநாதன், பொதுத்துறையை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது ஜெகநாதனிடம் இருந்த பொதுத்துறை தற்போது நந்தக்குமாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.