நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. சதீஷ், தினேஷ், முருகேசன், கார்த்தி கைதாகினர். தலைமறைவான முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.