நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். வகுப்பு இடைவேளையின்போது 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த 11 வயது மாணவியை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அப்போது மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.