நாமக்கல்: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் சுமார் ரூ.67லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நடைபெற்றது. 18 அடி உயரமுடைய ஆஞ்சநேயரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தமிழில் வேத மந்திரங்கள் ஒலிக்க ஆஞ்சநேயருக்கு நன்னீராட்டு செய்யப்பட்டது.