நாமக்கல்: நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக மிக பொருத்தமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் பொம்மை குட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்தவன் என்ற முறையில் பெருமை அடைகிறேன். கல்லூரியில் பயிலும் மாணவிகள் ரூ.1000 பெறுவதில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.