நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை போலீஸ் பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீஸ் துப்பாக்கி முனையில் கைது செய்தது.

 

Related posts

மேட்டூர் அருகே 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் பேட்டி

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை