நாமக்கல் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டிய 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டிய 10ம் வகுப்பு மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பள்ளிபாளையம் அடுத்துள்ள அலமேட்டை சேர்ந்தவர் சிறுவன் சந்தோஷ் இவர் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இரு தினத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்லாத சந்தோஷ் தனது தந்தையின் டூவீலரை எடுத்துக்கொண்டு தனது நண்பனை பார்க்க வெப்படை சென்று திரும்பி தெற்கு பாளையம் என்ற பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த நந்தகுமார் என்ற இளைஞர் சந்தோஷின் வாகனத்தை கவனிக்காமல் திரும்பியதால் விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த 10ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்தார். அதை தொடர்ந்து வேகமாக வந்த நந்தகுமார் என்ற இளைஞருக்கும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவது சட்டப்படி குற்றம் என நீண்ட நாட்களாகவே அரசு சார்பில் கூறப்பட்டுவருகிறது . பெற்றோர்கள் இதை கண்டிக்காமல் இருப்பதனால் இது போன்ற விபத்துகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ஈடுபட்டு வரும் நிலையில் பள்ளிபாளையம் காவல்துறை சிறுவனின் தந்தை மீது குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிறுவனின் தந்தை கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்