இதில், நிலை தடுமாறிய கார் தடுப்பு சுவரை தாண்டி பறந்து சென்று எதிரே சொகுசுக்கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லொறியில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி பறந்து சென்று கண்டெய்னர் லொறியில் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.