நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவரும் ஆவார். இவர் இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். காந்தியைப் போன்றே உடைய அணிந்து தேர்தலில் போட்டியிட டெபாசிட் பணமாக செலுத்தப்படும் ரூ.25000-ஐ பத்து ரூபாய் காயின்களாக தோளில் சுமந்து எடுத்து வந்தார்.
மேலும் நான் பிரதமர் ஆனால் லஞ்சம் ஊழல் செய்து பெற்ற தேர்தல் பத்திரங்கள் மற்றும் சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள கருப்பு பணத்தையும் 24 மணி நேரத்தில் மீட்டு இந்தியாவின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இவர் வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.