நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம்: அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் அவுரித் திடலில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டையில் பழஞ்சூர் செல்வம் இல்ல திருமண விழாவிலும், 11 மணிக்கு பரமேஸ்வரன் இல்ல திருமண விழாவிலும் 12 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் 12.30 மணி அளவில் பட்டுக் கோட்டை கோமதி விலாசில் தஞ்சை தெற்கு மாவட்ட முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்று பேசுகிறார்.

28ம் தேதி காலை 11 மணியளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். இரவு 7 மணி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நடைபெறும் அரியலூர், ெபரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். 29ம் தேதி 10.30 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கழுதூரில் நடக்கும் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திலும், மாலை 4 மணியளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34