அப்போது, சந்தேகத்திடமாக வகையில், பைக்கில் சுற்றித்திரிந்த வாலிபர் மற்றும் இளம்பெண்ணை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலம், நவுபடா மாவட்டம் ராணி முல்லா பகுதியை சேர்ந்த சியாம்ஹான்ஸ் (30), அவரது மனைவி பிரதீபா (29) என்பதும், இவர்கள் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.