Sunday, September 29, 2024
Home » நாகையில் 540 கிராம் எடை, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை..100 நாட்கள் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

நாகையில் 540 கிராம் எடை, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை..100 நாட்கள் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!

by Porselvi
Published: Last Updated on

நாகை :நாகையில் 540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை 100 நாட்கள் போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்களின் செயல் பாராட்டுக்குரியது.நாகை மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா, திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்த முருகதாஸ் தம்பதியர் கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். குழந்தை பேறுக்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகி பலனளிக்காத நிலையில், நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். 7 ஆண்டு கால காத்திருப்பிற்கு பலனாக சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி குழந்தை பிறந்தது. ஆனால் மருத்துவர்கள் நிர்ணயித்த தேதிக்கு முன்பாக பிறந்த குழந்தை வெறும் 540 கிராம் மட்டுமே எடை கொண்டு இருந்தது.

இதனால் சரண்யா தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குறைந்த எடையில் பிறந்த குழந்தையை மிகுந்த அக்கறையுடன் 100 நாட்களாக போராடி கைப்பற்றியுள்ள அரசு மருத்துவர்கள், குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் கடந்த 100 நாட்களாக பதைபதைப்புடன் இருந்த சரண்யா தம்பதியினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தேதிக்கு முன்பாகவே குறைந்த எடையில் பிறந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என முடிவெடுத்த நாகை அரசு மருத்துவர்கள், குழந்தையை இன்குபேட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு சிகிச்சை அளித்தனர்.

தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமை, மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை என பல கட்ட போராட்டங்களை கடந்து குழந்தையை தரமான சிகிச்சையால் மருத்துவர்கள் காப்பற்றி உள்ளனர்.முதல் 30 நாட்களில் செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கொடுத்ததும் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் புகட்டியும் அதன்பின்னர் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க பயிற்சி அளித்தும் 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த குழந்தையை தாய்ப்பால் வார நிறைவு விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பெற்றோரிடம் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார். குழந்தைக்கு தேவையான ஊட்டச் சத்து பெட்டகம் மற்றும் ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.

 

You may also like

Leave a Comment

6 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi