நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுதுறையில் இருந்து ராமன், பொன்னுதுரைக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்-நடத்தி உள்ளனர். மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.