நாகை: நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகையில் இருந்து காலை 8.15-க்கு பிரதமர் மோடி துவங்கி வைத்த கப்பல் 4 மணி நேரத்தில் காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. கப்பலில் வந்த பயணிகளுக்கு மாலை அணிவித்து இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர். பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.