நாகை: நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஒரத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையை மாற்றியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாகையில் கடைகள் அடைப்பு, ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.