இந்த காப்பகத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நாகையிலிருந்து ரயில் மூலமாக மாணவிகள் மயமானதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து போலீசார் மாணவிகளை தேடி சென்னையிலிருந்து அவர்களை அழைத்து வந்து மனநல ஆலோசனை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதி கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வேம்பரசன் நடவடிக்கை மேற்கொண்டார். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து வகுப்பு எடுத்து குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தாக்கல் வெளியாகிய நிலையில் சத்யபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.