நாகை அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு..!

நாகை: நாகை அருகே குருக்கத்தி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி 11-ம் வகுப்பு மாணவி அஸ்வினி உயிரிழந்தார். அஸ்வினி தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த அவரது தம்பி அவினாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி செல்லும் வழியில் சாலை தடுப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

விசிக 2 எம்பி தொகுதிகளிலும், 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற திமுகவே காரணம் : ரவிக்குமார் கருத்து!!

மாணவி பாலியல் புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் போலீஸ் விளக்கம்

ராத்திரியில் ரயிலில் விட்டு சென்ற ‘கல் மனசு தாய்’ ‘அம்மாவ காணோம்’… அழுது துடித்த பெண் குழந்தை