Sunday, September 29, 2024
Home » நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு..!!

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு..!!

by Lavanya

நாகை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். பருத்திதுறை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் விசைப்படகையும் சிறைபிடித்தது சிறையிலடைத்தது.

மேலும் இவர்களின் வழக்கை 2 முறை ஒத்திவைத்து நீதிமன்றம் காவலை நீட்டித்து வந்தது. படகுகளின் உரிமையாளர் வழக்கின் போது ஆஜராகாததாலும், இலங்கை மீன்வளத்துறையினர் வழக்கு விவரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததாலும் மீனவர்களின் காவல் 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் வந்தால் 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என்ற நிபந்தனைகளுடன் இன்று 10 பேரை விடுதலை செய்தனர். மேலும் அக்டோபர் 24ம் தேதிக்குள் படகின் உரிமையாளர் வழக்கு தொடரும் பட்சத்தில் இந்த படகு அரசுடைமை ஆக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சிறையிலடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விவரம்

தமிழக மீனவர்கள் மொத்தம் 40 பேர் சிறையிலிருந்தனர். கூடுதலாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். கடந்த மாதம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 12 மீனவர்களும், தற்போது நாகையை சேர்ந்த 10 மீனவர்களும் ஆக 22 மீனவர்கள் மட்டுமே இன்றுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளார் எஞ்சிய மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வழக்கு இந்த வார இறுதிக்குள் வந்து அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

20 − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi