இதனால் நான் சாதிரீதியாக பாகுபாடு பார்ப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார். அவரது கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் என்னை இழிவுப்படுத்தி பேட்டி கொடுத்துள்ளனர். என்னை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இதனால், ஆக. 22ல் திருச்சி தில்லை நகர் போலீசில் மீண்டும் புகார் அளித்தேன். இதில், 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணைக்கு பெயர் தெரியாத அந்த நபர்களின் எக்ஸ் தள ஐடி முகவரிக்கள் தேவை.
அப்போதுதான் முறையான விசாரணையை மேற்கொள்ள முடியும். இதற்காக திருச்சி தில்லை நகர் போலீசார் பெங்களூருவில் உள்ள எக்ஸ் தள நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர். ஆனால், அந்த நிறுவனம் போதுமான விபரங்களை தரவில்லை. ஆன்லைன் மூலம் தொல்லை கொடுப்பது, போலி ஐடிகளை உருவாக்கி மற்றவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது போன்றவற்றை தடுக்காவிட்டால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எக்ஸ் தளம் துணைபோகிறது என்று அர்த்தம். எக்ஸ் தளம் ஒத்துழைக்காததால், அந்த பதிவுகள் தற்போது இதர சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்நிறுவனத்தினர் உரிய தகவல்களை தராவிட்டால், எங்களுக்கு சமூகத்தில் உள்ள மரியாதை குறைந்துவிடும்.
இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘சமூக வலைத்தளங்களில் இதுபோன்று அவதூறான கருத்துக்களை போலி முகவரி மூலம் பதிவிடுவது அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு இதனை கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ் தள கணக்குகள் துவங்கும்போது ஆதார் விபரங்களை கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் புகார் குறித்து ஒன்றிய அரசு, எக்ஸ் சமூக வலைத்தள பொறுப்பு அலுவலர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 21க்கு தள்ளி வைத்தார். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று அவதூறான கருத்துக்களை போலி முகவரி மூலம் பதிவிடுவது அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு இதனை கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ் தள கணக்குகள் துவங்கும்போது ஆதார் விபரங்களை கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்.