என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் அந்த நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் அந்த நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஐந்தாவது யூனிட் பாய்லர் வெடித்த விபத்தில் 15 பேர் பலியான நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். வழக்கில் முன்ஜாமின் கோரி என்.எல்.சி. அதிகாரிகள் கோதண்டம், முத்துக்கண் உள்ளிட்ட 10 பேர் மனு தாக்கல் செய்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை வேறு அதிகாரிக்கு மாற்றுவது தொடர்பாக டிஜிபிதான் முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை