அந்தவகையில் கடந்த ஜூன் 27ம்தேதி காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை பட்டப்பகலில் அவ்வழியாக வந்த மர்மநபர் முதலில் பார்த்துவிட்டு கடந்து செல்வதும், பிறகு யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டபடி சைக்கிளை ஹாயாக எடுத்துச் செல்வதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. பின்னர் இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.