காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

ஆறுமுகநேரி: காயல்பட்டினத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, பட்டப்பகலில் மர்மநபர் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பைக், சைக்கிள் திருட்டு மற்றும் கோயில் உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வது குறித்த வீடியோ அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவது வாடிக்கையாகி விட்டது.

அந்தவகையில் கடந்த ஜூன் 27ம்தேதி காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை பட்டப்பகலில் அவ்வழியாக வந்த மர்மநபர் முதலில் பார்த்துவிட்டு கடந்து செல்வதும், பிறகு யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டபடி சைக்கிளை ஹாயாக எடுத்துச் செல்வதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. பின்னர் இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

 

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி