ஆலந்தூர்: நங்கநல்லூர், துரைசாமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வனிதா (38). இவர், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ஆட்டோ டிரைவரான தனது கணவர் நந்தகுமார் (45) மாயமானதால் கண்டுபிடித்து தர வேண்டும், என கூறியிருந்தார். இந்நிலையில், நங்கநல்லூர் பனச்சி அம்மன் கோயில் குளத்தில் நேற்று நந்தகுமார் சடலமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்க்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.