திருச்சி அருகே பரபரப்பு ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

*அலாரம் அடித்ததால் தப்பியோட்டம்

திருவெறும்பூர் : திருச்சி அருகே ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற போது அலாரம் அடித்ததால் மர்ம நபர்கள் தப்பியோடினர்.திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் அருகில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏடிஎம் மையம் உள்ளது.இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக கடைப்பாரையுடன் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், ஏடிஎம்மில் இருந்த மின்சார கனெக்சன் ஒயர்களை துண்டித்த போது அலாரம் அடிக்கவும் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளருக்கு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடப்பது குறித்து அலாரம் அடித்தது மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கி மேலாளர், மணிகண்டம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முதலில் ஒரு ஒயரை வெட்ட முயன்றபோது அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பி சென்றதும், இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியதும் தெரிய வந்தது.

பின்னர் போலீசார் கொள்ளையர்கள் விட்டு சென்ற கடப்பாரையை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என வங்கி மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்

ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம்

டெல்லியில் தொழிலாளர்களை சந்தித்து பேசினார் ராகுல்