இதை தொடர்ந்து அந்த யானைகள் அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயில் அருகே சண்டையிட்டு கொண்டே வெளியே வந்துள்ளது. இதனால், பொது மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு யானைகளும் தொட்டகெரே மைதானத்தின் அருகே பேரிகார்டுகளை தள்ளி கொண்டு சாலைக்கு வந்துள்ளது. உடனே பாகன்கள் மற்றும் வனத்துறையைினர் சம்பவ இடத்திற்கு சென்று அவற்றை அடக்கி உடனே அரண்மனைக்கு அழைத்து வருவதில் வெற்றி கண்டனர். இதனால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.