இந்நிலையில், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அலுவலகத்தில் அதிரடி ஆய்வு செய்தனர். அதில், கோயில் இடத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாஜ தேர்தல் அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், மறுநாளே சீல் வைக்கப்பட்டது மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாடகைக்கு எடுத்து அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் அரசை வெகுவாக பாராட்டினர்.