அதன்படி மயிலாப்பூர் போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வித்யா மந்திர் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். அதேபோல் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் மற்றொரு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டு பள்ளிகளுக்கு வந்த இ-மெயிலை வைத்து விசாரணை நடத்திய போது, ஓவியா உதயநிதி என்ற பெயரில் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் பிரிவின் உதவியுடன் மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.