சென்னை : இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் நிலையத்தில் இருந்து அடையாறு கழிவுநீர் உந்து நிலையத்துக்கு உந்துகுழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளது. அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். தேனாம்பேட்டை மண்டல பகுதி இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறினால் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். தேனாம்பேட்டை பகுதி பொறியாளர் 8144930909, துணை பகுதி பொறியாளர் 8144930259, 8144930225 ஐ அழைக்கலாம்.